அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

tamilan



இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்




முதல் வீதி ....First rule ...
அதிகாரத்தில் கை வைக்க கூடாது
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...
அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"
ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...
அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....
எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..
No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...
ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! -மீனா

I am ready to act as Rajinis mother - Meena
திருமணத்துக்குப்பிறகு தம்பிக்கோட்டை என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீனா. ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் அதன்பிறகு யாரும் அவர் பக்கம் திரும்பவில்லை. அதற்காக மனசுடைந்து போகவில்லை மீனா. அவர் பார்க்காத சினிமாவா. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக கல்லெறிந்தபடியே சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பொழுதை கழித்து வந்தார்.

இப்படியிருந்த நேரம்தான் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு மீனாவை தேடி வந்தது. மம்மூட்டிக்கு அம்மா என்றால், கதைப்படி ப்ளாஷ்பேக்கில் மம்மூட்டி குழந்தையாக இருக்கிறபோது அம்மாவாக நடிக்கிறாராம் மீனா. ஆனால், இநத செய்தி தற்போது மலையாள பட உலகில் மீனாவுக்கு பரபரப்பான என்ட்ரியாக அமைந்திருக்கிறது.

அதனால், அடுத்தடுத்து மலையாளத்தில் புதிய படங்களை கைப்பற்றும் நோக்கத்தில் கதை கேட்டு வரும் மீனா, தமிழையும் விடவில்லை. சில அபிமானத்திற்குரிய இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி அவர் சான்ஸ் கேட்க சென்ற இடத்தில் ஒரு இயக்குனர், மீனா எனக்கே அம்மாவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ரஜினி ஒரு மேடையில் சொன்னாரே என்பதை நினைவுகூர்ந்தாராம்.

அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்த மீனா, அப்படியொரு வாய்ப்பு வந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன். ரஜினி சாருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு கதாநாயகியாக நடித்தேன். இப்போது அம்மா வேடம் வந்தாலும் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி சாருக்கு அம்மாவாக நடிக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பெருமையாக சொன்னாராம் மீனா.
 
thanks dinamalar

முயற்சி திருவினையாக்கும்


பழமொழிகள்:
· முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். 
· 
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. 
· 
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும். 
· 
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். 
· 
எறும்பூரக் கல்லும் தேயும்.

தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு மரத்திலோசெடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும். அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது?காற்று அடிக்கும்போது கூடு ஆடும். ஆனால் விழுந்துவிடாது. அவ்வளவு பலமாக எப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?

அது ஒவ்வொரு புல்லாக எடுத்து வந்து மிகவும் நுணுக்கமாக கட்டும். சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்து விடும். மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை. அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும். இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.  அதை விடுங்கள் ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின் விதை எப்படி பறையையே பிளந்துசெடியாக முளைத்து பின் மரமாகிறதுஅதன் முயற்சிதான் அதன் வாழ்க்கைக்கு துவக்கத்தை தருகிறது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:

முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை என்பதை இந்த பழமொழி அறிவுறுத்துகிறது.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை:

மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.இங்கு'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லைஎன்று இருக்கிறது.அதாவது மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் என்பதை இந்த இரண்டு பழமொழிகளையும் ஒப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்:

ஒரு அம்மியை உடைப்பது என்பது கடினமான வேலை.அதனைக் கூட நாம் சுத்தியலால் அடி மேல் அடி அடித்தால் அது தகரும்,அதாவது உடையும்.அதேபோல் நாமும் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்:

நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் உண்டோ

எறும்பூரக் கல்லும் தேயும்:

எறும்புகள் சாரை சாரையாக ஒரு கல்லின் மீதோ அல்லது சுவற்றின் மீதோ செல்லும்போது அவை சென்ற தடம் தெளிவாக தெரியும். காரணம் அந்த இடம் தேய்ந்து இருக்கும். எறும்புகள் மறைமுகமாக நமக்கு முயற்சியின் தத்துவத்தை உணர்த்துகின்றன. சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.

அதனால் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயலுங்கள்.

நன்றி

எங்கே தொடங்கியதோ அங்கேயே முடியும்




ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும்கவலையும் அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான்.

வெளியில் இருந்து பார்த்தான்செல்வந்தனின் செல்வச் செழிப்பும்அவன் வீட்டிற்கு வரும் பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது பேராசையும் பொறாமையும் அடைந்தான். கடவுளிடம் தன்னை செல்வந்தனாக மாற்றிவிடுமாறு வேண்டினான். கடவுளும் இசைந்து அவனை செல்வந்தனாக மாற்றினார்.

செல்வ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த அவன் வீட்டிற்குவருமான வரித் துறை அதிகாரி தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினான். அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் ஊழியர்கள்அவனுக்கு இருக்கும் மரியாதை ஆகியவை செல்வந்தனாக இருந்த தொழிலாளியைக் கவர்ந்து விட்டன. உடனடியாக வருமான வரித் துறை அதிகாரியாக ஆசைப்பட்டான். கடவுளும் அவனை வருமான வரித் துறை அதிகாரியாக மாற்றினார்.

வருமான வரித் துறை அதிகாரியான அந்த கல் உடைக்கும் தொழிலாளி எல்லோர் வீட்டிற்கும் சோதனைக்குச் சென்றான். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானான். கோடை காலம் வந்தது. வெந்து தணிந்தது அவன் உடம்பு. சூரியனைப் பார்த்தான். யாருக்கும் பயப்படாதஎல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் போல் மாறிடத் துடித்தான்.
கடவுளும் அவனை சூரியனாக மாற்றினான். தன் கதிர்களால் பிரகாசமான வெளிச்சத்தையும்சூட்டையும் வாரித் தெளித்த சூரியனை விவசாயிகள் திட்டினர். பெரும் மேகம் ஒன்று வந்தது. சூரியனின் வெளிச்சத்தை அது மறைத்தது. இருட்டாக்கியது. மழை மேகமாய் மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

மழை மேகமாய் மாறிமழையாய்ப் பொழிந்துவெள்ளமாய் பெருக்கெடுத்து விவசாயிகளின் வயிற்றெரிச்சலைப் பெற்றான். மேகமாக மாறிய அவனை ஏதோ சக்தி மிகுந்த ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த்தான். காற்று என அறிந்ததும்காற்றாகி விடுமாறு கடவுளை வேண்டினான்.

காற்றாக மாறிசந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வந்தான். கூரை வீடுகளையும்,மரங்களையும் சாய்த்தான். ஆனால் தன்னால் பெரும் பாறை ஒன்றினுள் புக முடியாததை எண்ணி தன்னை பாறையாக மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

பாறையாக மாறிய அவன் தன்னைப் போல் சக்தி மிகுந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் அடைந்தான். உடனே தன்னை சுத்தி மற்றும் உளியால் பிளக்க வந்த தொழிலாளியைப் பார்த்த்தும்கடவுளிடம் தன்னைப் பழையபடி கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிடும் படி மன்னிப்புடன் வேண்டினான். கடவுளும் வாழ்க்கையை உணர்ந்த அவனை கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிட்டார்.

கருத்து: வாழ்க்கை என்பது முடிவும் தொடக்கமும் ஒன்றாகவே அமைந்த ஒரு வட்டம்.

ஹால்மார்க் முத்திரை

நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. 

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.

தற்போது சிமென்ட், மினரல் வாட்டர், பால் உள்ளிட்ட 77 பொருட்களுக்கு கட்டாயமாக பி.ஐ.எஸ். முத்திரை பெற வேண்டும் என்று இருக்கிறது. இதில், விரைவில் தங்க ஆபரணங்களும் சேர இருக்கிறது.  

மேலும், மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐ.டி. பொருட்களில் தரமானதை மட்டும் இறக்குமதி செய்ய அவற்றுக்கும் தர முத்திரை திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.   

ஹால்மார்க் வந்தது எப்படி? 

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.

*

ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்! 
(25.10.2011 தேதியிட்ட நாணயம் விகடனில் இருந்து) 

முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது? என நகைக் கடைக்காரர்களிடம் விசாரித்தோம். விளக்கமாகவே எடுத்துச் சொன்னார்கள்.

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.  

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை!  

தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.  

முத்திரையில் ஏமாற்றினால்..?  

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

 எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.  சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.    

ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG