அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

இருக்க வேண்டியவை & இருக்கக் கூடாதவை:


மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

இருக்க வேண்டியவை: அன்புபாசம்பணிவுஅறம்ஈகைதானம்தவம்நன்றிநட்புநகைச்சுவை உணர்வுபொறுமைசுறுசுறுப்புவிட்டுக்கொடுக்கும் தன்மைஆசைஉதவிஉண்மையே பேசுதல்பொய் கூறாமை,  கருணைசாந்தம்மன்னிப்புஅடக்கம்அமைதிமானம்ஒழுக்கம்அஞ்சாமைவீரம்தைரியம்,ஆர்வம்ரசனைஇன்னும் பல.....

இருக்கக் கூடாதவை:  பேராசைகோபம்பொறாமைபிடிவாதம்துரோகம்அவசரம்பொய் பேசுதல்,சோம்பேறித்தனம்வஞ்சகம்திருட்டுகொலைகொள்ளைசூதுபிறன்மனை நோக்குதல்இன்னும் பலப்பல.....
இது போல பல குணங்களோ பண்புகளோ இருந்தாலும் அவற்றில் முதன்மை குணம் என்னவாக இருக்க வேண்டும்யோசித்து பார்த்துக் கொண்டே இருங்கள்... முடிவில் தெரிந்து கொள்வோம்.
இது ஒன்று மட்டும் இருந்தால் மற்ற எல்லா குணங்களும் பண்புகளும் இதற்கு பின்னால் வந்து விடும் என்பது என்னுடைய கருத்து. உங்களின் கருத்துகள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
மனிதனின் நல்ல குணங்களையும் பண்புகளையும் பற்றி மட்டுமே இங்கு ஆராய போகிறோம்.....
முதலில் அன்புபாசம்... பாசமென்பது நம் பெற்றோர்களிடம்குழந்தைகளிடம் மற்றும் நம் உறவினர்களிடம் நாம் பாசமாக இருப்பது. அன்பென்பது நமக்கு தெரியாதவர்களிடம் அன்பை செலுத்துவது. எல்லாரிடமும் எப்போதும் அன்பாக இருக்க முடியுமாஎல்லாரிடமும் அன்பாக இருப்பவர்கள்எல்லா உயிர்களிடமும் (மனிதனை தவிர) அன்பாக இருக்கிறார்களாஅதுவும் இன்றைய காலத்தில்?ஆனால் எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும்கோபம் இருக்க கூடாது,நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும். 

ஏன்னென்றால்அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குஆகமனிதனுக்கு முதன்மையாக அன்பு/பாசம்/கருணை/சாந்தம்/பணிவு இருந்தால் போதுமா?
அடுத்து விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவர்கள். இவர்களை உலகம் இளிச்சவாயன் என்று கூறுகிறது. எல்லாவற்றையும் எப்போதும் விட்டுக் கொடுப்பவரை 'ஏமாந்த சோணகிரிஎன்று சிரிக்கிறது. உங்களுக்கு உண்டான உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்க தேவையில்லை.

ஏன்னென்றால்ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி. ஆகமனிதனுக்கு முதன்மையாக விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் போதுமாபார்ப்போம்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது. முதலில்செய்த தவறை ஒத்துக் கொள்ள தைரியம் வேண்டும். அவனை மன்னிக்க பெரிய மனது வேண்டும்.  ஏன்னென்றால்மன்னிக்க தெரிந்தவனே மனிதன்! ஆனால்,மன்னித்து ஏற்றுக் கொள்பவன் இறைவன்! ஆகமனிதனுக்கு முதன்மையாக மன்னிக்கும் தன்மை/தைரியம் இருந்தால் போதுமா?

ஒவ்வொன்றுக்கும் சில விளக்கங்கள் தரலாம். நீள் பதிவு ஆகி விடும் என்பதால்................ அடுத்ததாக அறம்,ஈகைதானம்உதவிதவம்நன்றிநட்புஆர்வம்ரசனை - இவை எல்லாமே பொருள் இருப்பவர்களிடம் இருக்கும். பொருள் இல்லாதவர்களிடம் ...இவை எல்லாமே மனிதனுக்கு தேவை தான். ஆனால்,முதன்மையாக இருக்க வேண்டிய குணம் - ஒரு சின்ன கதை மூலம்:

அந்த காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில்அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன்ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது.

ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்த தாயிடம், "பழம் நன்றாக உள்ளதுநன்றி" என்று சந்தோசமாக தெரிவித்தார். ஆனால்அந்த தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்த தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றார்.

சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவேஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன்இன்னொரு பழத்தை  பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்த தாயிடம் சொல்லிருக்கலாமேஇரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். அதற்கு குரு, "சீடர்களேஅந்த தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளை சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதை சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, " சீடர்களேஇதைத் தான் நீங்கள் அந்த தாயின் முன்பு செய்திருப்பீர்கள். அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்கு தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.

இந்த கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்னஅந்த தாய் சந்தோசப்படகுரு முகத்தை கூட சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டுநன்றாக உள்ளது என்று பாராட்டினாரேஅந்தபாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும். 
நன்றி
வேல்மயில் கோபால்

பெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்


பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது….

1. `நாம் கொஞ்சம் பேசணும்

உங்களவர்உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.
ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடுவார்.

`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகைஆத்திரம்தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.
பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்

பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால்அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

 பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோஅப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அதுபெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க

 `உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களேதொந்தியும் தொப்பையுமா’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.
 இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனையே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.
கண்ணில் தெரிவதை மட்டும் கண்டுவியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோஅதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. ‘நீங்க எப்பவும் இப்படித்தான்…’

திருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களைகுறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.

 ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.
அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில்குற்ற உணர்வில் இருப்பார். அப்போதுஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாகநொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்கும. அவற்றை `இளநரைஎன்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

 `கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே இப்போ தடியிடையா ஆயிட்டே’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா….?!

ஆண்களிடம் பெண்கள் விரும்பாதவை

பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும்! அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக்க வேண்டும்! அவர்கள் விரும்பாத மாதிரிதான் நம் நடவடிக்கைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம்.

1. நேரத்தை சரியாக கனக்கிட்டு வைத்திருக்காவிட்டால்

நேரத்தை எப்படி சரியாக கணக்கிட்டு அந்த நேர வேலைகளை சரியாக முடிக்கவேண்டும்!! அப்படியில்லாமல் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை எப்போதும் காக்க வைக்கிறீர்களாநிச்சயம் இது சந்தோசத்தைத் தராது..அதன் பின் கேள்விகளும்.. விளக்கங்களும் சண்டைகளும்.. சரியா வராது.

நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமாஎன்று அம்மணி கேட்க .. இதுக்குப் பிறகு நாம என்னத்தை சந்தோஷமாக இருப்பது?

இதே பிரச்சனை அலுவலகத்தில்,நண்பர்களிடம் என்று பரவினால் எந்த இடத்திலும் நல்லபடியா சந்தோசமா இருக்கமுடியாது. மொத்த விசயங்களும் கொலாப்ஸ் ஆகி விடும்.

2. சாக்கு போக்கு சொல்லி காலத்தை ஓட்டினால்….

சும்மா சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுபவரா.. ஒரு வேலையைச் செய்யாமல் மறந்து விட்டேன்” என்று நிற்பவராகட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சின்னச்சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் மறதி மிகப்பெரிய பிரச்சினைகளில் உங்களை மாட்டிவைக்கும்.

சிலபேர் அவர்கள் வேலைகளை மறக்காமல் செய்துவிட்டு மனைவியுடன் வெளியில் செல்ல வேண்டியதையோ அல்லது மனைவி சம்பந்தமான முக்கிய விஷயங்களையோ மறந்துவிடுவார்கள். இது அவர்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையின்மைஅலட்சியப்போக்கு என்றே கருதப்படும்!!

3. சூழ்நிலைக்கேர்ப நடந்து கொள்ளாவிட்டால்

சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கவேண்டும். மனைவியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்தபொழுதை மிகுந்த சந்தோஷத்துடன் கழிக்கவேண்டும்! பிரச்சினைகள் எல்லோருக்கும் உள்ளதுதான். இது பெண்களுக்கும் தெரியும்.

ஆனாலும் சந்தோசமானமகிழ்ச்சியான தருணங்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவும் முன்னேற்பாடுடன் ஜோக்குகள்விளையாட்டுக்கள் என்று அசத்தினீர்களென்றால் அவ்வளவுதான். ஆள் ஃபிளாட் ஆகிவிடுவார்கள்!!

4. நன்றாக உடையணியாவிட்டால்….

உடை அணிவது முடிஅலங்காரம் ஆகியவற்றில் நாம் அக்கறையுடன்இருக்கவேண்டும். காதலியின் தாத்தாவின் பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் அவருக்கு ஒரு பரிசு வாங்கிச்செல்வது, (முடிந்தால் உங்க ஆளுக்கும் ஒன்று.. சும்மா ஒரு சாக்குத்தானே…) நல்ல உடை அணிந்து செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

தாத்தாதானே என்று ஏனோதானோ என்று உடையணிந்தோபரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. அது அங்குள்ளோர்களுக்கு முக்கியமாக உங்கள் காதலிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்!! நீங்கள் உங்கள் காதலியால் பெரிதும் ரசிக்கப்படும் முக்கிய நபர் என்பதை மறக்கவேண்டாம்.

5. அனாவசியமாக விஷயங்களை மறைத்தால்….

விஷயங்களை அனாவசியமாக மறைப்பதுஅப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. நீங்கள் நிறைய விஷயங்களை மறைத்துவைத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நம் சொந்தக்காரர்கள் (கோள் சொல்வதற்கென்றே இதில் சிலர் இருப்பர்) நண்பர்கள் மூலம் தெரியும்போது நீங்கள் எந்தச்சமாதானமும் சொல்ல முடியாது.

முழுப்பொய்யராகக் காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவீர்கள்!! அப்புறம் நாம் சொல்லும் சமாதானங்கள் எடுபடுமா என்ன!!” நீங்கள் அவ்வளவு பெரிய விசயத்தையே மறத்தவர்… உங்களை எப்படி நம்புவது?” என்றுதான் கேட்பார்கள்.

6.மனைவியை வைத்துக்கொண்டு மற்ற பெண்களை ஸைட் அடித்தால்….

 மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோபின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் மனைவி அதைத் தவறாக (மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்… அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!.. ஹி.. ஹிஹி.. இதை உடனே சொல்ல மாட்டர்கள்.

கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ப்ரூஃபானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க… அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே…” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது.

பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால் அவ்வளவுதான்.


நன்றி


i got email from my friend

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG