அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

சிந்தனை செய் மனமே



திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்யமாட்டான். எவன் எப்பொழுதும் சந்தோஷத்துடனும்திருப்தியுடனும் இருக்கிறானோஅவனே அனைவரையும் சந்தோஷத்துடன் இருக்கச் செய்வான்.
நாக்கு பாவமான வார்த்தைகளைப் பேசுவதற்கு தயாராக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.



சோம்பல் அனைத்து விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. "சோம்பேறிஎன்ற சொல்லே அபத்தமானது. அப்படி ஒரு பெயரை வாங்கிவிடவே கூடாது. எப்பாடுபட்டாவது அதனை விட்டுவிட வேண்டும்.




உலகம் என்பது தர்மஅதர்மச் செயல்களுக்கான தேர்வு நடக்கும் இடம். மிகுந்த கவனத்துடன் தர்மஅதர்மங்களைப் பரிசீலனை செய்துநல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.




கெட்டவர்களின் சகவாசம் நரகம். சாதுக்களின் சகவாசம் சொர்க்கம்.




சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை அறிந்தும்அதைக் கடைபிடிக்காதவன் பாவம் செய்தவனை விட கீழானவனாகிறான். எனவேசாஸ்திரங்களின் கூறியபடி அதனை முறையாக கடைப்பிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.




நாம் செய்யும் அனைத்து செயல்களும் முழுமைபெற செயல்களின் ஆதாரத்தில் தர்மம் இருக்க வேண்டும்.




எப்போதும்எவரையும் துன்புறுத்த கூடாதுநல்லெண்ணத்துடனும்கெட்ட எண்ணத்துடனும் ஒரு பிராணியை கொடுமைப்படுத்த கூடாது.




கூரையில்லாத வீட்டில் மழை தாரைகள் விழுவது போல யோசனையில்லாத மனிதனின் மனதில் விரோதிகள் புகுந்து விடுவார்கள்என்பதால் அனைத்து செயல்கள் செய்வதற்கு முன்பாக யோசனையுடன் செய்வது நல்லது.




எதிரி கூட அதிக தீங்கு விளைவிப்பதில்லைஆனால் கெட்ட வழியில் செல்லும் மனமோ அதைக் காட்டிலும் அதிக நஷ்டத்தை விளைவிக்கும் என்பதால் மனதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.




வண்டு எப்படி பூக்களின் அழகையும்வாசனையையும் சேதப்படுத்தாமல் மதுவை எடுக்கிறதோஅதுபோல் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.




போரில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயிப்பவன்உண்மையில் வீரனல்ல. எவனொருவன் தன்னைத் தானே ஜெயிக்கிறானோஅவன் தான் உண்மையான வீரனாவான்.




பிறருக்கு உபதேசம் செய்பவன்அந்த உபதேசங்களுக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துவது என்பது கடினமான செயல்.




உலகம் நீர்க்குமிழி மற்றும் கானல் நீர் போன்றதுஇந்த உலகை துச்சமாக மதிப்பவனை இறப்பு தொடுவதில்லை. அதாவதுஅவன் இறப்பை எதிர்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கிறான்.
வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் ஏற்படும் போதுகோபத்தை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான சாரதியாவான். மற்றவர்கள் அனைவரும் கயிற்றைப் பிடிப்பவர்கள் தான்.




அன்பின் மூலம் கோபத்தையும்நல்ல செயல்கள் மூலம் தீய செயல்களையும்,பொதுநலத்தால் சுயநலத்தையும்உண்மை மூலம் பொய்யையும்வெற்றிகொள்ள வேண்டும்.




வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது.  எவன் அதிகமாகப் பேசுகிறானோ அவன் அதிகம் பொய் பேசுகிறான். வார்த்தைகளை எவ்வளவு குறைக்கமுடியுமோஅவ்வளவு குறைத்துப் பேச வேண்டும்.






நன்றி


0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG