அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

தேர்தல்




தேர்தல் ,

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் பிழைப்போரால்
அமோகமாக நிகழ்த்தப்படும்
உரிமைத் திருவிழா ....
சாலைகள் தோறும்
ஒலிப்பெருக்கியின் ஓலங்கள்...
வீதிகள் தோறும்
வண்ணத் தோரணங்களின்
சாரங்கள்....


பொதுமக்கள் அனைவரும்
உறவினர்கள் ஆகும்
உலகச் சமாதானதினம் !


வாக்குறுதிப் பள்ளம்
வழிந்து நிரம்பும் , தலைவர்களின்
போதை மிகுதியால்.....


விழாவில் கூடும் சந்தையில்
விற்கும் பொருளாக
வாக்குச்சீட்டு .....


நாளை இறக்கும் கிழவிக்கும்
வாக்குரிமை....
வாக்குச்சாவடிவரைப் பறக்கும்
ஆட்டோக்களுக்கு அன்று
அமோக சவாரிகள்...


ம்ம்ம்...
அற்ப மானிடனுக்குத் தெரியாது
ஓட்டைப் பெற்றுக் கொண்டு
(திரு)ஓட்டைக் கொடுப்பார்களென்று !


தன் ஐந்தாண்டு ஆயுளை
வெறும் ஐந்நூற்றுக்கு விற்றுவிட்டு
அல்லல்படும் அவர்களுக்கு
தேர்தல் ஓர் திருவிழாதான்!


வாக்காளனே ! தேர்தல் ,
தோரணங்கள் கட்ட கோவில் திருவிழாவா ?
புத்தாடை அணிய பொங்கல்தீபாவளியா ?
உன் ஐந்தாண்டு ஆயுளை விற்க ,
தலைவர்கள் எமதூதர்களா ?


உன் ஆறாம் அறிவு
அனாதையாய்க் கிடக்கின்றது ....
அதற்குத் தேர்தலன்று மட்டுமாவது
ஆதரவுகொடு......!


நன்றி

 நண்பனின் வரிகள்

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG