அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு பார்வை!!!

>
> தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணே முக்கால் லட்சம்
> கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்பட வேயில்லை என்றெல்லாம் மக்களே பேச
> ஆரம்பித்து விட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம்
> நிரூபிக்கப்பட வில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார்
> முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம், மக்கள் சிந்திக்க
> வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன? என்பதை
> துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து
> எழுதியுள்ளார்.
>
> மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே
> நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை
> பெற்று கொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள்
> பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டு வந்தது ராசாவா? மக்களே
> உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு
> ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
>
> 1999 ஆண்டில் தான் தொலை தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று
> வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின்
> எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது
> 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால்
> உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம்
> வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming
> and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய
> இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று
> இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம்
> செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
>
> நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
> நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு
> புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை
> அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை
> சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
>
> இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம்
> இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122
> தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன?
> போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை
> வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை
> நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய
> நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத
> நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
>
> நியாயக் கணக்கு: இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக
> உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது
> கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY)
> பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போது
> 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள்.
> 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 =
> 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G
> ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச
> வருமானம் இன்று வரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள்
> கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
>
> இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன
> என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு
> அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
> கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
> முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது
> INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும்
> அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு
> இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது
> மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
>
> மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும்.
> அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று
> அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே
> தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class"
> மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும்
> பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
>
> ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும்.
> ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக
> உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில்
> போடப்படும்.
>
> துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்
> அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
> முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650
> கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு
> சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
>
> துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
> நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
> பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
> சென்று அடைந்துள்ளது.
>
> துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான
> நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர்
> பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
> என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி
> இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற
> பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
> நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
>
> இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும்
> கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான்
> திட்டமிட்டு "
S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற
> சந்தேகம் தெளிவாக எழுகிறது.
>
> துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை
> ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்
> நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன்
> அடைந்து இருப்பார்கள்.
>
> துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது
> பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற
> நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
> பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
> அச்சுறுத்தல்.
>
> துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட,
> கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு,
> சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி
> கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய
> ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும்
> முறைகேடு.
>
> துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
> ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம்
> செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில்
> ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
> உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
> என்ற ஆணவ நினைப்பு.
>
> துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
> பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி
> மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
>
> துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை
> இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு
> செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால்
> ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்
> என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று
> ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
> கண்டிருக்கலாம்.
>
> துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை
> சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு
> வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு
> முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
> ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த
> உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின்
> விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள
> ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது
> ரத்தத்தில் விட்டு செல்கின்றனர். இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட
> துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது.
> மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின்
> நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம்
> அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
>
> ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில்
> அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை.
> இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி
> உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து
> இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும்
> இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
>
> அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக
> செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி
> மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும்
> பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள்
> ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக
> ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை
> மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
>
> இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
> சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
> தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
> செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
> உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
> கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயர
> போவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின்
> வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம்
> மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
>
> எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள்
> என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும்
> நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்து
> கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும்
> தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி
> பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ
> தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து
> தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும்.
> செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
>
> நன்றி : சிவகுமார்.M சீனியர் எஞ்சினியர் தனியார் நிறுவனம்
>

கவுண்டமணியும் கடையேழு வள்ளல்களும்

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர். அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.
85c325865-1[1].jpg

Thanks for my friend...... i got it from my friend' s   email
நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.


இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் , பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் , பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் , கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:
வைட்டமின் , பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:
வைட்டமின் , பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் , பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கத்தரி பிஞ்சு:
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG