அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

தினமும் இணையத்தில் 10 ரூபாய் சம்பாதிக்க விளம்பரம் பார்த்தல் போதும்

  
இந்த லிங்க் கிளிக் பண்ணுக
<a href="http://www.PaisaLive.com/register.asp?338991-343924.5"><b><font color="#FF0000" size="4">Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!</font></b></a>


இந்த மாதிரி விண்டோ ஓபன் ஆகும். அதுல உங்க ஈமெயில் அட்ரஸ் குடுங்க,,,





இதில் சேர்தவுடன் உங்களுடைய அக்கௌண்டில் 99 ரூபாய் வந்துவிடும்.

உங்களுடைய நண்பர்களை சேர்தால் 50 ரூபாய் வந்துவிடும்.

தினமும் வரும் மெயில் படித்தால் போதும் உங்களுடைய அக்கௌண்டில் ௦௦௦0.25 பைசா முதல் 1 ரூபாய் கிரெடிட் ஆகும்.




















தினமும் 5 மெசேஜ் வருமாம்..........

எந்த ஒரு முன் பணம் செலுத்தாமல் தினமும் 20 முதல் 2000 வரை சம்பாதிக்க

இனணயம் மூலம் நாம் தினமும் 20 முதல் 2000 வரை சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யவேண்டியது .... எனது ப்ளாகில் viewbestads என்ற  பேனரை கிளிக் செய்யவும்....


உங்களுக்கென ஒரு புதிய கணக்கை தொடங்கவும்......தினமும் வரும் விளம்பரத்தை காண view menu வில் உள்ள view ads கிளிக் செய்யவும்.. அந்த விளம்பரம்தின் மேல் congracts gift point credit என்று வரும்வரை அந்த விளம்பரத்தை பார்க்கவும் ........ பிறகு அந்த விளம்பரதிர்க்குண்டன தொகை உங்களுடைய அக்கௌன்ட்இல் காசு கூடிவிடும்....


அந்த view menu வில் play quiz , play hourly contest , memory game ஆகிய அனைத்தும் விளையாடினால் உங்களுடைய அக்கௌன்ட்இல் பாயிண்ட் [காசு] கூடிவிடும்....

உங்களுடைய மொத்த தொகைய காண my account -இல் சென்று account statement -இல் சென்றால் உங்களுடைய மொத்த தொகைய காணலாம்....

 
தினமும் view menu வில் positive news படித்தாலும் உங்களுக்கு உங்களுடைய அக்கௌன்ட்இல் பாயிண்ட் [காசு] கூடிவிடும்....






இனணயம் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க


கூகிள் அட்சென்ஸ் செய்து கொண்டு மேலும் சம்பாதிக்க வழி இருக்கிறதா என்றுதேடிக்கொண்டு இருந்தேன் .இவ்வளவு நாள் தேடியும் தற்போதுதான் அதனைகண்டுபிடிக்க முடிந்ததது.இதில் இணைவதும் இலவசம்தான்.ஆனால் இந்த வேலையில்பணமாக சம்பாதிக்க முடியாது.இருந்தாலும் நம்மால் பொருளாக சம்பாதிக்கமுடியும்.இப்போது கீழ்காணும் வலைத்தள முகவரியில் கொடுத்துள்ளேன்
 http://www.fribiz.com/referrer/rbraj  





வலைத்தள சென்றவுடன் click to login என்ற பட்டனை கிளிக் செய்யவும்...... அதில் facebook அக்கௌன்ட் மூலம் செல்லவும் (இல்லாதவர்கள் புதிய அக்கௌன்ட் create பண்ணவும்..


உள்ளே சென்றவுடன் கீழ் காணும் விண்டோ ஓபன் ஆகும்.. உங்களிடம் எவள்ளவு பிட்ஸ்  இருக்கிறதோ அதற்க்கு தவர்தாற்போல் கிபிட் இருகிறதா என்று பார்க்கவும்.....





நீங்களும் உங்களுடையா நண்பர்களை இணையத்தால் 10000 பிட்ஸ் கிடைக்கும்.


பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் யுத்தம் செய்

 
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மிஷ்கினின் யுத்தம் செய் சிறுத்தையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் காவலன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் என்பது கவலைதரும் விஷயம்.

5. ஆடுகளம்
வெற்றிமாறனின் ஆடுகளம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 18.93 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 3.01 கோடிகள்.

4. காவலன்
நான்காவது இடத்தில் காவலன். இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 2.83 கோடிகள். ஆடுகளத்தைவிட குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 22.5 லட்சங்கள்.

3. தூங்காநகரம்
சென்ற வாரம் வெளியான தூங்காநகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் மூன்று தின வசூல் 28.64 லட்சங்கள்.

2. சிறுத்தை
சிவா இயக்கியிருக்கும் சிறுத்தைக்கு இரண்டாவது இடம். இதன் சென்ற வார இறுதி வசூல் 32.44 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 3.73 கோடிகள். பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அதிக கலெ‌க்சனை‌ப் பெற்றுள்ளது.

1. யுத்தம் செய்மிஷ்கினின் இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 34.07 லட்சங்கள்.

இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்


வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.

உலகம் முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.


ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.

சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை, ஞாபகம், நினைவு, மனம் தொடர்புடையது.

ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.

1967
ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.


மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் காரணமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆலீவ் எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


நீண்ட மோதிர விரல் கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.இதயத் துடிப்பு,

ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்த நாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.
 
பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமை தான் ஏற்படுகிறது.

ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்

பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்


தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

நன்றி : நண்பனின் இ-மெயில்...................

 

கிரிக்கெட் -- உலக கிண்ண போட்டியில் கடைசியாக விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்



1ஸ்டேவே  டிகோலோ [Steve Tikolo ] கென்யா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 65 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1 விக்கெட் [NS சித்து]
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1996
தற்போதைய வயது : 39
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 3  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 24   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 93 விக்கெட்
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 3377 ரன்கள்



இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்



2 . ரிக்கி பாண்டிங் [Ricky Ponting ]  ஆஸ்திரேலியா [கப்டன்]

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- சவுத் ஆப்ரிக்கா
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1  ரன்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1995 
தற்போதைய வயது : 36
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 29 முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 79   முறை 

இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 13082   ரன்கள்


இவர்  சிறந்த கிரிக்கெட் வீரர் ... மட்டை வீச்சாளர்

3 . பிரட் லீ  --ஆஸ்திரேலியா


முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 2000
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 334 விக்கெட்

இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்
4 . பால் கோல்லிங்க்வூத் [Paul Collingwood] இங்கிலாந்த்  

முதல் சர்வதேச ஒரு நாள்  போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0 விக்கெட் 
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் --  2001  
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 5  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 26   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 110 விக்கெட் 


இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்

5 . ஸ்காட்ட் ஸ்டைரிஸ் [Scott Styris] நியூசலாந்து

முதல் சர்வதேச ஒரு நாள்  போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  3  விக்கெட் 
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் --  1999
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 4  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 26   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 131 விக்கெட் 


இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்

6 . ஷோஹிப் அக்தர் [Shoaib Akhtar ]  --பாகிஸ்தான்

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- ஜிம்பாப்வே 
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1997
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 242 விக்கெட்

இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்


7 . ஜேக் கல்லிஸ் [Jacques Kallis] சவுத் ஆப்ரிக்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இங்கிலாந்த்   
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 38 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0 விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1996
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 17  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 80   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 259 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 11002 ரன்கள்


இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்


8 . முத்தைய முரளிதரன் [Muttiah Muralitharan]  --ஸ்ரீலங்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய     முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1  விக்கெட் [PK அம்ரே]
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1993
தற்போதைய வயது : 38
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 517 விக்கெட்

இவர்  சிறந்த  சுழல்  பந்து  வீச்சாளர்


9 . திலகரத்னே  தில்ஷன் [Tillakaratne Dilshan]  ஸ்ரீலங்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --ஜிம்பாப்வே    
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 35 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1999
தற்போதைய வயது : 34  
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 8  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 20   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 54 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 4915 ரன்கள்


இவர்  சிறந்த மட்டை வீச்சாளர்

10 .ஷிவ்னரினே சந்தர்பால்  [Shivnarine Chanderpaul,]  வெஸ்ட் இண்டீஸ்

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --இந்திய     
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 22 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1994
தற்போதைய வயது : 36  
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் --11  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 59முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 14 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 8661 ரன்கள்


இவர்  சிறந்த கிரிக்கெட் வீரர் ... மட்டை வீச்சாளர்


11 . ஜாகீர் கான் [Zaheer Khan]  --இந்திய 

 முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- கென்யா 
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  3  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 2000
தற்போதைய வயது : 32

உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 252 விக்கெட்


வயது 32  என்றலும் இவருக்குஅடிக்கடி உடல் உபாதைகள் வருகின்றன   


இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்

12 . சச்சின்  டெண்டுல்கர் [Sachin Tendulkar] இந்திய

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 0 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1989
தற்போதைய வயது : 37
உலக கிண்ண போட்டியில் -- 5 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 46  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 93   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 154 விக்கெட் 

இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 17629 ரன்கள்


அடுத்த [2015 ] உலக கிண்ண போட்டியில் இவர் ஆடினால் வயது : 42

இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்



 

தவிர்க்க வேண்டிய தவறுகள்



வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1.
டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:

பலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே? என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், "பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா?' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2.
ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:

இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
பவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி கிடைக்காது.

3.
வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:

எது வலுவான பாஸ்வேர்ட்? பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.

4.
மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:

ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

5.
பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :

டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

6.
கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:

திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

7.
ஒரே ஒரு பேக் அப் அபாயம்:

பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.


நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG