அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

இன்றைய செய்தி -- இந்த அறிய பையன் கருத்தும்

மும்பை தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி உஷார் நிலை: டில்லியிலும் பாதுகாப்பு

ரெண்டு வருசமா கசபை கசாப் கடைக்கு அனுப்பாம........ அப்பவே சுட்டுர்க்கனும் அவனை.......... ....


 
நாங்க எவ்வளவோ சமாளிசிருக்கம்.... இத சமாளிக்கமட்டமா... எல்லாம் பிப்ரவரி 19th வரைக்கும்தான் அதுக்கப்பறம் கிரிக்கெட் உலககோப்பை வந்திடும்.. மக்கள் எல்லாம் மாறதிடுவாங்க..
 
 
அப்படியா ..... அப்ப இந்த கள்மாடி, சசிதரூர், லலித்மோடி,ராஜா இவங்க யாருங்க மேடம்.......  இந்திய சுதந்திரம் அடைந்து 63  வருடத்தில் உங்க ஆட்சி கிட்டத்தட்ட 55 வருடம்...
 
 
 
எங்களுக்கு தண்ணி தரமட்டனு சொன்னிகல அதன் ஆண்டவனின் தண்டனை....
 
 
அப்ப நிறைய போட்டோவும் அட்ரஸ் ப்ரூபும் எடுத்து வைக்கணும்....
 
 
அவங்களுக்கு குரு பெயர்ச்சி மட்டுதான்... ஆனால் நமக்கு ஜென்ம சனி நடக்குது.. தினமும் விலைவாசி ஏற்றம், முக்கியமா பெட்ரோல் தினமும் ஏற்றம்
 
 
மிக முக்கியம் ...  அது அவுங்க வீட்டு பிரச்சன்னை.....
 
இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா

அட விடுங்க மேடம் அவர் உங்க படத்துல அடுத்த ஹீரோவகூட இருக்கலாம்..

1 மாத மின்கட்டணம் 70 லட்சம் : இந்தியாவில் தான் இந்த நிலை

அரசாங்கமே உங்க கைல்தனமே உணமைய சார்....... பெட்ரோல் காசு எல்லாம் கரக்ட வறுதா...

முகேஷ் அம்பானி சார்

அப்படியே எங்க தமிழ் மக்களுக்கும் கொஞ்சம் மின்சாரம் குடுங்க....


 
பாம்பு கண்டு பயபடமாட்டிக ஆனா விலைவாசி கண்டு ???????????
 
ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும் --





 
 
 
 
 
 

நமது தேசத்தின் சில அவலங்கள்!


1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.


 

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.
வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.
Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்  பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட  கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.


 

7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...


 

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


 

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!


 

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!


 

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!


5.


 


இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!


எனக்கு மெயில் வந்தவை

பள்ளிக்கூடம் எக்ஸாம் பேப்பர் பாருங்கோ மிஸ் பண்ண வேண்டாம்


சும்மா உள்ள படிச்சு பாருங்க .......  பாஸ் பண்ணன் எப்புடியெல்லாம் கதை விட வேண்டி இருக்குடா சாமி......!!!!!!!




ஐயோ இவ்வளுவு எழுதியும் மார்க் இல்லையா !!!!!!!!!



1 / 2  மார்க் வாங்கியாச்சு ....

அடுத்து கணிதம்

 
Add caption
இப்படியெல்லாம் கேள்வி  கேட்ட
கடைசியா சாக வேண்டியதுதான்


  



எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ணமட்டமா  
  
 என்ன சின்ன புள்ளதனமா x   கண்டுபிடி கனுமா ..... ஐயோ ஐயோ ... ம்ம்

 



எனக்கு ரெண்டு  சந்தேகம்

பிறப்பு -- ஒரு முறை

இறப்பு -- ஒரு முறை

லவ் -- ஒரு முறை

வாழ்க்கை -- ஒரு முறை

ஏன் எக்ஸாம் மட்டு -- பல  முறை

முடியல்ல

**************************************************


உடம்பு சரி இல்லன அரசாங்க  மருத்துவமனை  வேண்டாம்

அரசாங்க பள்ளிகூடம் வேண்டாம்

அரசாங்க கல்லூரி வேண்டாம்

                                            அரசாங்க சாப்பாடு வேண்டாம்

                                           தமிழில் படிக்க  வேண்டாம்

                   ஆனால் அரசாங்க வேலை மட்டும் வேணுமா


                                                     என்ன  கொடுமை........



எக்ஸாம் பேப்பர் பள்ளிக்கூடம் பேப்பர்

சும்மா உள்ள படிச்சு பாருங்க ..... கேள்வியவே பதில எழுதிருப்பக........


அய்யா 1 / 2  மார்க் வாங்கிட்டேன்


எவ்வல்லவோ பண்ணிட்டோம் இந்த பண்ணமட்டமா .......


அப்பட அடுத்த பேப்பர் கொடுக்கப்ப




அடுத்து கணிதம் எக்ஸாம் பேப்பர் ....






X  கண்டுபிடுன்னுமா சின்ன புள்ள தனமா.......

பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா * ஆசிய ஹாக்கியில் அபாரம் .

குவாங்சு: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஹாக்கி "பி' பிரிவில் இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதற்கு முன் இந்த ஆண்டு நடந்த அஸ்லான்ஷா (4-2), உலக கோப்பை (4-1) மற்றும் காமன்வெல்த் போட்டி (7-4) என வரிசையாக மூன்று தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
 இம்முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி, ஹாங்காங்கை 7-0 என்றும், வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கிலும் பந்தாடியது. இதே அசத்தல் இன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தது.
போட்டி துவங்கிய சில நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை பெனால்டி கார்னர் "ஸ்பெஷலிஸ்ட்' சந்தீப் சிங், கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் ரேகன் பட், பீல்டு கோல் அடித்து பதிலடி தந்தார். பின் இந்தியாவுக்கு தரம் வீர் (16 வது நிமிடம்) மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தானின் அபாசி ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் 47வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, சந்தீப் சிங் மீண்டும் கோலாக மாற்றி அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து "பி' பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

** நன்றி தினமலர் ****


எல்லருக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்!!!!

இன்று சர்வதேச ஆண்கள் தினம்


எல்லருக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்

ஜாலி ஜாலி ......









ஆண்கள்..: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...

முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...
இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.

அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.

போச்சு எல்லம் போச்சு......................



நன்றி தினமலர்

3 வேளை சாப்பாடு ஏன்?

 

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைபிடித்தால் சில வியாதிகளை கட்டுபடுத்த முடியும். காலை உணவுக்கு பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளி போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். உணவுக்கு பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். மற்றொரு ஆய்வு, `பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை’ என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

இப்படியும் படத்தலைப்புகள் வரலாம்!


Tamil films new titles
Advertisement
  சென்னையில் கல்லூரி இளசுகளிடையே ஒரு எஸ்.எம்.எஸ். ரொம்ப பிரபலமாகி வருகிறது சமீப காலமாக...! அது கோலிவுட் நாயகர்களின் பட டைட்டில்களைப் பற்றிய நக்கலும் நையாண்டியும்தான் என்பது ஹைலைட்.

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம் என்பதாக இருக்குமாம். மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா என்பதாக இருக்குமாம். தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன் உள்ளிட்ட படங்களிலும், ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால் உள்ளிட்ட படங்களிலும், விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ பெயரை உ‌டைய படங்களிலும், சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களிலும், மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.! 

‌கோடம்பாக்கத்தின் டைட்டில் பஞ்சம் இப்படியும் தலைப்புகளை சூட்ட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் வேதனையுடன் ஒரு ரிட்டயர்டு கோலிவுட் டைரக்டர்!

உண்மையான காதல்

தி கிரேட் லவ் இன் திஸ் வேர்ல்ட்.........................

இந்த வாலிபன் அமெரிக்க ராணுவத்தில் பண்ணிபுருகிறார். இவர் இராக் போரில் சண்டையில் பங்கேற்றார்.......

 இந்த பெண்தான் உலகில் இப்ப உண்மையான காதலுக்கு எடுத்துகாட்டு.............

அண்ணனுக்கு பெண் எதிலும் சலித்தவர்கல் அல்ல ... என்பதை நிருபித்துவிட்டால்........

போருக்கு முன்









போருக்கு பின்






















வாழ்க பல்லாண்டு... காதலுக்கு கண் இல்லை.................................















நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG