அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

நடிகர் விக்ரம் - சசிக்குமார் புகைச்சல்!

சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி,  ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை. கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி,  ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை.

ஆனால் சமீப நாட்களாக  தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்கிடையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல. தேசிய விருது நாயகன் விக்ரமும், தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும்தான். பிரச்சனைக்கான காரணத்தை தேடினால் படத்தயாரிப்பு விவகாரத்தைத்தான் சொல்கிறார்கள். சசிகுமார் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தினை ஆரம்பத்தில் விக்ரம், சசிகுமார் இருவரும் இணைந்துதான் தயாரித்தார்கள். பாதிப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ஏனோ விக்ரம் படத் தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக்கொண்டார். ஆனாலும் மனம் தளராத சசிக்குமார் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் அந்த படத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் திடீரென தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக் கொண்டது அழகா? என்ற ரீதியில்தான் இருவருக்குமிடையில் புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

Blog Archive

My Blog List

TAMIL MP3 SONG