அயோத்தி இட விவகாரத்தில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் ( இன்று 23 ம் தேதி மதியம் ) இடைக்கால தடை விதித்தது. ஒரு வார காலம் தடை இருக்கும், இது தொடர்பான விசாரணை மீண்டும் வரும் 28 ம் தேதி நடக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கும் நோட்டீஸ் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை ( வெள்ளிக்கிழமை ) தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறாமல் தடுக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க எல்லா மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மாநில அரசுகளும், போலீசாரைக் குவித்து முழு கவனத்தில் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், தீர்ப்பு வரும் நாளன்று மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
தடை கோரி மனுத்தாக்கல் செய்தவர்: ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் இந்த தீர்ப்புக்கு தடை வழங்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது., தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.
0 comments:
Post a Comment