அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!

அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!




--------------------------------------------------------------------------------

நடிகர் அஜித்குமாருக்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புகைச்சல் இன்னமும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே, தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன்தான் நான் பணியாற்ற முடியும்... அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்று அறிக்கை விட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கவுதம் மேனன் இப்போது அஜித்திடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-






10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடுறாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். முதலில் ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர்யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிடமும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டிருக்கார்.






இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச்சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை.

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG